For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்செந்தூர் அருகே அரசு பஸ்-மாருதி வேன் மோதலில் 9 பேர் பலி

By Chakra
Google Oneindia Tamil News

ஸ்ரீவைகுண்டம்: திருநெல்வேலி- திருச்செந்தூர் சாலையில் இன்று அரசு பஸ்சும் மாருதி ஆம்னி வேனும் மோதிக் கொண்டதில் 9 பேர் பலியாயினர்.

ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளம் என்ற இடத்தில் இன்று மாலை இந்த விபத்து நடந்தது.

திருநெல்வேலியில் இரு்ந்து திருச்செந்தூர் நோக்கி அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையைக் கடந்த ஒரு பெண் மீது மோதாமல் தவிர்ப்பதற்காக பஸ்ஸை வலதுபுறமாக டிரைவர் திருப்பினார். ஆனாலும் அந்தப் பெண் மீது பஸ் மோதியதில் அவர் அந்த இடத்திலேயே இறந்தார்.

பஸ் சாலையின் வலது பக்கமாக வந்துவிட்ட நிலையில், எதிரே வந்த மாருதி ஆம்னி வேன் மீதும் மோதியது. இதில் ஆம்னி வேனில் பயணம் செய்த 8 பேர் பலியாயினர். அதில் பெண்களும், குழந்தைகளும் அடக்கம்.

இவர்கள் அனைவரும் தச்சநல்லூரைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.

English summary
A government transport corporation bus and Maruthi van collide near Tiruchendur, killing 9 passenges
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X