செங்கோட்டை அருகே பொங்கல் கொண்டாடிய குஜராத் மக்கள்: கலைநிகழ்ச்சிகள் கோலாகலம்
செங்கோட்டை: செங்கோட்டை அருகே வாழும் குஜராத் மாநிலத்தவர்களின் அமைப்பு சார்பில் பொங்கலை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
செங்கோட்டை அருகேயுள்ள பிரானூர் பார்டரில் குஜராத் மாநிலத்தவர்கள் அதிக அளவில் வசிக்கின்றனர். அவர்கள் ஸ்ரீதட்சின் பாரத் கட்ச் கடலா பாட்டிதார் சமாஜ் என்ற அமைப்பினையும் நடத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் அந்த அமைப்பின் சார்பில் மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளில் பொங்கல் திருநாளை முன்னிட்டு மகா சங்கராந்தி தினத்தன்று கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நேற்று முன்தினம் இரவு பிரானூர் பார்டரில் பொங்கல் திருநாள், மகா சங்கராந்தி தினத்தை முன்னிட்டு கேரளா, புதுவை மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசி்க்கும் இந்த அமைப்பினர் ஒன்று கூடி பல்வேறு கலை நிகழ்ச்சிகளை நடத்தினர். இந்நிகழ்ச்சிகளில் சிறுவர், சிறுமியர் முதல் பெரியவர்கள் வரை பலர் கலந்து கொண்டனர்.
நேற்று 2வது நாளாகவும் இந்நிகழ்ச்சிகள் நடைபெற்றது. குஜராத் மாநிலத்தவர்களின் கலைநிகழ்ச்சிகள் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.












Click it and Unblock the Notifications