For Daily Alerts
Just In
கூடங்குளத்தில் மின் உற்பத்தி திட்டமிட்டபடி துவங்கும்-நாராயணசாமி
சென்னை: கூடங்குளம் அணு மின் உலையில் திட்டமிட்டப்படி மின் உற்பத்தி தொடங்கும் என்று மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறியுள்ளார். அணு மின் நிலையத்திற்கு நான்கு அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
தைப்பொங்கல் தினத்தன்று சென்னை வந்த அமைச்சர் நாராயணசாமி, கோபாலபுரத்திற்கு சென்று திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,
பொங்கல் வாழ்த்து தெரிவிப்பதற்காக கருணாநிதியை சந்தித்தேன். கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 75 சதவீத பணிகள் நிறைவு பெற்றுவிட்டன.
அங்கு திட்டமிட்டபடி மின் உற்பத்தி தொடங்கும். அணு உலையை சுற்றிலும் நான்கு அடுக்குப் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது என்றார்.
Comments
English summary
Union Minister Narayaswamy meets Karunanidhi at Gopalapuram on Sunday. He told KKNPP work start soon.
Story first published: Monday, January 16, 2012, 10:14 [IST]