இது சத்தியமூர்த்தி பவன் சமரச பொங்கல்!!!
சென்னை: கோஷ்டிப் பூசல், பரபரப்பிற்கு பெயர் பெற்ற சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் கட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள் அனைவரும் இணைந்து பொங்கல் கொண்டாடினர். ஜி.கே.வாசன், இளங்கோவன், ஜெயந்தி நடராஜன் ஆகிய அமைச்சர்கள் தொண்டர்களுடன் இணைந்து பொங்கல் உண்டனர்.
சத்தியமூர்த்தி பவனில் நடக்கும் காங்கிரஸ் ரகளைகள் மிகவும் பிரசித்தம். இந்நிலையில் பொங்கல் திருநாளை அமைதியான முறையில் கொண்டாடினர் காங்கிரஸ் கட்சியினர். சத்தியமூர்த்தி பவனில் பொங்கல் விழாவிற்காக மிகப் பெரிய ஸ்டால் அமைக்கப்பட்டிருந்தது. தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் தொண்டர்களுக்கு சர்க்கரை பொங்கல் வழங்கி வாழ்த்து தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய மந்திரி ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவர்கள் குமரிஅனந்தன், எம்.கிருஷ்ணசாமி எம்.பி., முன்னாள் மந்திரி பூவராகன், ஜே.எம். ஆரூண் எம்.பி., முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பீட்டர் அல்போன்ஸ், எஸ்.ஜி.விநாயகமூர்த்தி, யசோதா, காயத்ரிதேவி, ராணிவெங்கடேசன், மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் பங்கேற்றனர். அனைவரும் உற்சாகமாக பொங்கல் உண்டதோடு வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டனர்.
விழாவில் மத்திய மந்திரிகள் ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் ஆகியோரும் தொண்டர்களுடன் அமர்ந்து பொங்கல் சாப்பிட்டுவிட்டு அனைவருக்கும் பொங்கல் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications