சுவிட்சர்லாந்து ஞானலிங்கேஸ்வரர் கோவிலில் பொங்கல் விழா
Subscribe to Oneindia Tamil

சுவிட்சர்லாந்தில் அதிகளவில் தமிழர்கள் வசித்து வருவதால், தமிழ் மக்களின் பொங்கல் பண்டிகை கடந்த 15ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. பொங்கலை யொட்டி சுவிட்சர்லாந்தின் தலைநகர் பேர்னில் உள்ள அருள்மிகு ஞானலிங்கேஸ்வரர் கோவிலில் காலை 10 மணிக்கு பொங்கல் விழா துவங்கியது.
பகல் 12 மணிக்கு சூரியனுக்கு பொங்கலிட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. மாலை 5 மணி முதல் ஐயப்பன் சிறப்பு அபிஷேக ஆராதனையுடன் பதினெட்டாம் படிப்பூஜை, நெய் அபிஷேகம், பஜனை கூட்டுப் பிரார்த்தனை, பூம்பல்லத்தில் வீதி உலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் சிறப்பாக நடைபெற்றன.
தமிழர் திருநாள் பொங்கலை யொட்டி இளம் தமிழ் சமூகத்தை ஊக்குவிக்கும் வகையி்ல் குழந்தைகளுக்கும், இளவயதினருக்கும் கோவில் சார்பாக சிறப்புப் பொங்கல் பரிசுகள் வழங்கப்பட்டன.












Click it and Unblock the Notifications