சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்கள் பிரச்சனையை தமிழக அரசு தீர்க்க வேண்டும்- சிபிஎம் கோரிக்கை
சங்கரன்கோவில்: கூலி உயர்வு கோரி போராடி வரும் சங்கரன்கோவில் விசைத்தறி தொழிலாளர்களின் பிரச்சனையில், தமிழக அரசு உடனடியாக நியாயமான தீர்வு காண வேண்டும் என்று சிபிஎம் கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் 10,000 விசைத்தறி தொழிலாளர்கள் கூலி உயர்வு கோரி கடந்த ஆண்டு டிசம்பர் 26ம் தேதி முதல் 23 நாட்களாக வேலை நிறுத்தம் செய்து போராடி வருகின்றனர். 2011ல் போடப்பட்ட ஒப்பந்தம் கடந்த டிசம்பர் 24ம் தேதியுடன் காலாவதியானது. இந்த நிலையில் இது குறித்து தொழிலாளர் துறை அதிகாரி முன்பு 11 முறை பேச்சுவார்த்தை நடத்தியும், நியாயமான தீர்வு காணப்படவில்லை.
தற்போது அத்தியாவசிய பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்துள்ள நிலையில் 40 சதவீத கூலி உயர்வு கோரி விசைதறி தொழிலாளர்கள் போராடி வருகின்றனர். ஆனால் நியாயமான உடன்பாட்டிற்கு வர மறுப்பதால், விசைத்தறி தொழிலாளர்கள் கடும் துயரம் அனுபவித்து வருகின்றனர்.
இப்பிரச்சனையில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு நியாயமான உடன்பாடு காண உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications