குஜராத் லோக்ஆயுக்தா நீதிபதி நியமனம் செல்லும்: மோடி அரசு மனு தள்ளுபடி
அகமதாபாத் : குஜராத்தில் லோக்ஆயுக்தா நீதிமன்ற நீதிபதியை ஆளுனர் நியமித்தது செல்லும் என்று அம்மாநில உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பு, நரேந்திர மோடி அரசுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.
குஜராத் லோக்ஆயுக்தா நீதிபதிக்கான பதவி கடந்த 2003-ம் ஆண்டில் இருந்து நிரப்பப்படாமல் இருந்தது., இதனையடுத்து மாநில ஆளுனர் காம்லா பேனிவால் கடந்த ஆகஸ்ட் மாதம் 25ம் தேதி லோக் ஆயுக்தா நீதிபதியாக ஆர்.ஏ. மேத்தாவை நியமித்தார்.
இதற்கு மோடி தலைமையிலான அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மாநில முதல்வரை கலந்து ஆலோசிக்காமல் மேத்தாவை லோக்ஆயுக்தா நீதிபதியாக ஆளுனர் நியமித்தது சட்டவிரோதம் என்றும் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் பிஜேபியும் கடுமையாக எதிர்ப்பை பதிவு செய்தது.
இதன் தொடர்ச்சியாக, ஆளுனரில் முடிவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் குஜராத் அரசு வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கு தொடர்பாக, கடந்த அக்டோபர் மாதம், இரண்டு உயர் நீதிமன்ற நீதிபதிகள் வெவ்வேறான தீர்ப்பை வழங்கினர்.
இதனால், இந்த வழக்கு மூன்றாவது நீதிபதி அகில் குரோசியிடம் சென்றது. வழக்கை விசாரித்த நீதிபதி, லோக் ஆயுக்தா நீதிபதியை ஆளுநர் நியமித்தது செல்லும் என்று தீர்ப்பளித்தார். மேலும் குஜராத் மாநில அரசின் மனுவையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications