சொத்துக் குவிப்பு வழக்கு: சசிகலாவின் 2 வழக்கறிஞர்களும் திடீர் விலகல்
Subscribe to Oneindia Tamil

முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.
இந் நிலையில் சசிகலாவுடனான தனது 25 ஆண்டு நட்பை முறித்துக் கொண்ட ஜெயலலிதா, அவரையும் அவரது குடும்பத்தினரையும் வீட்டை விட்டும் கட்சியை விட்டும் விரட்டினார்.
இந் நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது சசிகலா தரப்பில் ஆஜரான வெங்கடேசன் உட்பட 2 வழக்கறிஞர்கள் வழக்கிலிருந்து விலகிக் கொள்வதாகக் கூறினர். இதையடுத்து அவர்களுக்குப் பதிலாக மணிசங்கர் என்பவர் ஆஜரானார்.
இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணை 30ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications