சாந்தவேலு மரணம் விபத்தாம்!-கேரள அரசு கூறுகிறது
திருவனந்தபுரம்: சென்னையைச் சேர்ந்த சாந்தவேலுவின் மரணம் தவிர்க்க முடியாத மரணமே, திட்டமிட்ட செயல் அல்ல என்று கேரள அரசு விளக்கம் அளித்துள்ளது.
இது குறித்து கேரள முதலமைச்சரின் அலுவலக செயலாளர் பி.டி. சாக்கோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
சென்னை திருவேற்காட்டை சேர்ந்த சாந்தவேலு, சபரிமலைக்கு செல்லும் வழியில் கடந்த 9ம் தேதி அன்று கரிமலா என்ற இடத்தில் உள்ள டீக்கடையில் இருந்த பாய்லர் இவர் மீது விழுந்ததில் சுடு நீரால் காயமடைந்தார்.
சாந்தவேலுவிடம் இருந்த ஈரமான ரூபாய் தாள்களை பாய்லரில் ஒட்டி காய வைத்தபோது அந்த பாய்லர் இருந்த அடுப்பு உடைந்து விட்டது.
வெண்ணீரால் பாதிக்கப்பட்ட சாந்தவேலுவை உடனே அருகில் உள்ள கரிமலா மருத்துவ முதலுதவி மையத்துக்கு அழைத்துச் சென்று, அங்கிருந்து பம்பாவில் உள்ள ஆரம்ப சுகாதார மையத்தில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சாந்தவேலு, 42 சதவீதம் தீக்காயம் அடைந்ததால் அவரை கோட்டையத்திலுள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் வைத்து சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த நிலையில், கடந்த 10ம் தேதி அன்று சாந்தவேலுவின் சகோதரர், கோட்டையம் மருத்துவமனைக்கு வந்து, அங்கிருந்த மருத்துவர்களின் அறிவுரையையும் மீறி சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக சாந்தவேலுவின் சகோதரர் மருத்துவமனை நிர்வாகத்திடம் எழுத்துபூர்வமான கடிதமும் கொடுத்துள்ளார். எனவே, சாந்தவேலுவின் மரணம் தவிர்க்க முடியாத மரணம் தானே தவிர, திட்டமிட்ட செயல் அல்ல.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
நேற்று இந்திரா, நாளை நேரு.. 62 வருட சாதனை முறியடிப்பு! மிக நீண்ட கால பிரதமர் என்ற வரலாறு படைத்த மோடி -
காவலாளிக்கு லாட்டரியில் விழுந்த ரூ.78 கோடி பரிசு.. ஐக்கிய அரபு அமீரகத்தில் ‘மெகா ஜாக்பாட்’












Click it and Unblock the Notifications