எம்.ஜி.ஆர். பிறந்தநாள் கொண்டாட்டம்: பணகுடி அருகே அதி்முக கோஷ்டி மோதல்
நெல்லை: பணகுடியில் எம்.ஜி.ஆர். பிறந்த நாளை 2 கோஷ்டிகளாக பிரிந்து அதிமுகவினர் கொண்டாடியபோது தகராறு ஏற்பட்டது. இதையடுத்து இரு கோஷ்டியினரையும் போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
பணகுடி பஸ் நிலையம் அருகே நகர செயலாளர் மிக்கெல் தலைமையில் இன்று காலை எம்.ஜி.ஆர். பிறந்த நாளை கொண்டாட அக்கட்சியினர் ஏற்பாடு செய்தனர். இதற்காக பேரூராட்சி தலைவர் லாரன்ஸ், துணை தலைவர்கள் ஆறுமுகம், கவுன்சிலர்கள் இளையபெருமாள், உச்சிமாகாளி மற்றும் கட்சி தொண்டர்கள் வந்தனர்.
பஸ் நிலையத்தில் இருந்து 100 மீட்டர் தூரத்தில் ராமலிங்கசுவாமி தெருக்கு அருகில் அவைத்தலைவர் தங்கசாமி தலைமையில் சுமார் 100 அதி்முக தொண்டர்கள் மற்றொரு கோஷ்டியாக எம்.ஜி.ஆர். உருவப்படத்தை வைத்து பிறந்த நாளை கொண்டாட ஏற்பாடு செய்தனர். இதனால் இரு தரப்பினருக்கும் இடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இது கைகலப்பாக மாறும் சூழ்நிலையில் வள்ளியூர் ஒன்றிய செயலாளர் அழகானந்தம் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தினர். பின்னர் இரு கோஷ்டியினரும் கலைந்து சென்றனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.












Click it and Unblock the Notifications