எத்தியோப்பியாவில் தீவிரவாதிகள் தாக்கியதில் 5 வெளிநாட்டவர் பலி
அடிஸ் அபாபா: எத்தியோப்பியாவில் 5 வெளிநாட்டுப் பயணிகளை அந்நாட்டு தீவிரவாதிகள் படுகொலை செய்ததாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது குறித்து எத்தியோப்பிய தொலைக்காட்சியில் வெளியான செய்தி விவரம்,
எத்தியோப்பியாவில் எரிட்ரியா எல்லை அருகே 8 வெளிநாட்டவர்களை தீவிரவாதிகள் தாக்கியதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதில் 2 பேர் படுகாயமடைந்தனர், ஒருவர் காயமின்றி தப்பினார். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர் என்று அது செய்தி வெளியிட்டுள்ளது.
2 ஆஸ்திரியர்கள் உள்பட ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்த 22 பேரை தீவிரவாதிகள் தாக்கியதாக ஆஸ்திரிய நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் பீட்டர் லான்ஸ்கி தெரிவித்துள்ளார்.
தீவிரவாதிகள் தாக்கியதில் ஜெர்மனி, பெல்ஜியம், ஆஸ்திரியா, இத்தாலி மற்றும் ஹங்கேரியைச் சேர்ந்த 5 பேர் இறந்துள்ளனர் என்று எத்தியோப்பியாவின் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
ஆனால் இறந்தவர்கள் யார், யார் என்று குறிப்பிட்டு கூற முடியாது என்று அவர் மேலும் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications