பாகிஸ்தானில் பத்திரிக்கையாளரை சுட்டுக் கொன்ற தாலிபான்கள்
இஸ்லாமாபாத்: வடகிழக்கு பாகிஸ்தானில் உள்ள மசூதியில் தொழுது கொண்டிருந்த வாய்ஸ் ஆப் அமெரிக்கா பத்திரிக்கையாளர் முகர்ரம் கான் ஆதிப் தாலிபான் தீவிரவாதிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானின் கைபர்-படுங்க்வா மாகாண தலைநகரான பெஷாவரில் இருந்து 35 கிமீ தூரத்தில் உள்ள ஷப்காதர் நகரைச் சேர்ந்தவர் முகர்ரம் கான் ஆதிப்(35). வாய்ஸ் ஆப் அமெரிக்கா பத்திரிக்கையில் பணிபுரிந்தார். நேற்று மாலை தனது வீட்டுக்கு அருகே உள்ள மசூதியில் தொழுகச் சென்றார். அங்கு அவர் தொழுது கொண்டிருக்கையில் திடீர் என்று பாகிஸ்தானைச் சேர்ந்த தெஹ்ரிக் இ தாலிபான் தீவிரவாதிகள் 2 பேர் மோட்டார் சைக்கிளில் மசூதிக்கு வந்தனர்.
அவர்களில் ஒருவன் மசூதிக்குள் நுழைந்து முகர்ரம் கானை நோக்கி துப்பாக்கியால் சுட்டான். இதில் படுகாயமடைந்த அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார். இந்த தாக்குதலில் தொழுகை நடத்திக் கொண்டிருந்தவரும் காயமடைந்தார்.
வாய்ஸ் ஆப் அமெரிக்கா தவிர ஆதிப் துனியா என்னும் நியூஸ் சேனலிலும் பண்புரிந்து வந்தார். அவருக்கு எற்கனவே தாலிபான் தீவிரவாதிகள் கொலை மிரட்டல் விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications