சுரேஷன் ராஜன் தொழிற்சாலையில் 'ரெய்டு'-2வது நாளாக இன்றும் தொடர்கிறது!
நாகர்கோவில்: முன்னாள் திமுக அமைச்சர் சுரேஷன் ராஜனுக்குச் சொந்தமான தொழிற்சாலையில் இன்று 2வது நாளாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்கள்.
திமுக அமைச்சரவையில் இடம் பெற்றிருந்தவர் சுரேஷ் ராஜன். சுற்றுலாத்துறை உள்ளிட்ட அமைச்சர் பொறுப்பை வகித்துள்ளார். கன்னியாகுமரி மாவட்ட திமுக செயலாளராகவும் இவர் இருக்கிறார்.
நெல்லை மாவட்டம் பழவூர் கிராமத்தில் இவருக்குச் சொந்தமாக ஒரு இரும்புத் தொழிற்சாலை உள்ளது. நேற்று இங்கு நாகர்கோவில் லஞ்ச ஒழிப்பு போலீசாரும், பொதுப்பணித்துறை அதிகாரிகளும் திடீரென ஆய்வில் ஈடுபட்டனர்.
அந்த தொழிற்சாலையின் கட்டிடங்களை அங்குலம் அங்குலமாக அளவெடுத்து அவற்றை கட்டுவதற்கு ஆகும் செலவை மதிப்பீடாக தயாரித்தனர். அதேபோல் கட்டிடத்துக்கு பயன்படுத்தப்பட்டுள்ள இரும்பு, மரங்கள், தொழிற்சாலையில் உள்ள எந்திரங்கள், மேஜை, நாற்காலிகள் மற்றும் தளவாட பொருட்கள் போன்றவற்றுக்கும் மதிப்பீடு தயாரித்தனர். மேலும் தொழிற்சாலையின் எல்லைகளையும் அளந்து சரிபார்த்தனர்.
இன்றும் இந்தப் பணி தொடர்கிறது. ஆலையில் உள்ள உபகரணங்களின் மதிப்பு உள்ளிட்டவற்றை அவர்கள் கேட்டு தகவல் சேகரித்தனர்.












Click it and Unblock the Notifications