கோத்ராவில் நரேந்திர மோடி உண்ணாவிரதம்!
அகமதாபாத்: குஜராத் முதல்வர் நரேந்திர மோடி இன்று கோத்ரா நகரில் உண்ணாவிரதம் இருந்தார்.
நல்லிணக்கத்தை வலியுறுத்தி நரேந்திர மோடி மாநிலம் முழுவதும் பல கட்டங்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக இன்று குஜராத் மாநிலம் கோத்ரா நகரில் உண்ணாவிரதம் இருந்தார். அவருடன் பல்லாயிரக்கணக்கானவர்கள் உண்ணாவிரதம் இருந்தனர்.
இதையடுத்து கோத்ரா நகரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. உண்ணாவிரத மேடை பகுதியில் 1,600 போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். முக்கிய இடங்களில் அதிரடிப்படை வீரர்கள் நிறுத்தப்பட்டிருந்தனர்.
இந்த உண்ணாவிரதத்தை எதிர்த்து போராட்டம் நடத்த முயன்ற 6 பேரை போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்தனர்.
இந்த உண்ணாவிரதத்துக்கு எதிராக முன்னாள் குஜராத் முதல்வரும் காங்கிரஸ் தலைவருமான சங்கர்சிங் வகேலா, நாளை கோத்ராவில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வருகிறார். மோடி உண்ணாவிரதம் நடத்தும் இடத்தில் எல்லாம் இவரும் உண்ணாவிரதப் போராட்டங்களை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
கோத்ராவில் ரயில் எரிப்பு சம்பவத்தையடுத்து நடந்த மாபெரும் மதக் கலவரத்தில் ஆயிரக்கணக்கான சிறுபான்மையினர் கொலை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ரயில் எரிப்பில் 59 கர சேவகர்கள் பலியானதும் குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications