ராம்தேவ் 'கோட்டை'யிலிருந்து உ.பி. தேர்தல் பிரசாரத்தைத் தொடங்குகிறது அன்னா குழு!

Subscribe to Oneindia Tamil

Anna Hazare
டேராடூன்: ஐந்து மாநில தேர்தல் பிரசாரத்தில் குதிப்பதில்லை என்ற முடிவை எடுத்திருந்த அன்னா ஹஸாரே குழு தற்போது திடீரென தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடிவு செய்துள்ளது. பாபா ராம்தேவின் ஆசிரமம் அமைந்துள்ள ஹரித்வாரிலிருந்து நாளை உ.பி. மாநில சட்டசபைத் தேர்தல் பிரசாரத்தை அன்னா குழு தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பலமான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி தொடர் போராட்டங்களை நடத்தி வந்தார் அன்னா. அதற்கு ஆரம்பத்தில் நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் பின்னர் அக்குழுவினரில் பலர் குழப்பமான நிலைப்பாடுகளை எடுத்ததாலும், அவர்கள் மீது சரமாரியாக பல்வேறு புகார்கள் எழுந்ததாலும் அன்னா குழுவின் போராட்டங்களுக்கு மக்கள் மத்தியில் ஆதரவு குறைய ஆரம்பித்தது.

மும்பையில் அன்னா ஹஸாரே தொடங்கிய உண்ணாவிரதத்துக்கு மக்கள் ஆதரவு அதிகமாக இல்லை. உடல்நிலை சரியில்லாததால் உண்ணாவிரதத்தை பாதியில் நிறுத்தினார்.

இதைத் தொடர்ந்து, சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களில் காங்கிரசுக்கு எதிராக பிரசாரம் செய்ய மாட்டோம் என அன்னா குழு அறிவித்தது.

இந்நிலையில், இந்த முடிவை அன்னா குழு நேற்று திடீரென கைவிட்டது. தேர்தல் நடக்கும் 5 மாநிலங்களில் ஊழலுக்கு எதிராக பிரசாரம் செய்யப்படும் என அன்னா குழு அறிவித்தது. ஹரித்வாரில் நாளை பிரசாரம் தொடங்கப்படுகிறது. அன்னா குழு உறுப்பினர்கள் அரவிந்த் கேஜ்ரிவால், கிரண்பேடி உட்பட பலர் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர். ஆனால் அன்னா வர மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அன்னா குழு கூறுகையில், 5 மாநிலங்களில் அன்னா குழு பிரசாரம் செய்யும். நாங்கள் எந்த கட்சிக்கும் எதிராக பிரசாரம் செய்ய மாட்டோம். வாக்காளர்களிடம் ஊழல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி, நேர்மையானவர்களை தேர்ந்ததெடுக்கும்படி கூறுவோம். வாக்காளர்களை வழி நடத்த இதுதான் சரியான நேரம் என்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+