முன்னாள் எம்எல்ஏ ரங்கநாதன் குண்டர் சட்டத்தில் கைதானது செல்லாது- உயர்நீதிமன்றம்
சென்னை: திமுக முன்னாள் எம்.எல்.ஏ. ரங்கநாதனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தது செல்லாது என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.
சென்னை வில்லிவாக்கம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.ரங்கநாதன்(61). இவர் மீது அம்பத்தூரை சேர்ந்த கிருபைநாயகம் என்பவரின் நிலத்தை அபகரித்ததாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் நொளம்பூர் காவல் நிலைய போலீசார், வழக்குப் பதிவு செய்து ரங்கநாதன் மற்றும் அவரது உதவியாளர் கெளரிசங்கர் உள்ளிட்டோர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் 2 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்குமாறு சென்னை போலீஸ் கமிஷனர் கடந்த ஆண்டு ஆகஸ்டு 8ம் தேதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து ரங்கநாதன் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆள்கொணர்வு மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் புகார் தாரரின் சிவில் வழக்கு நிலுவையில் உள்ளதை கருத்தில் கொள்ளாமல், எங்கள் மீது கிரிமினல் வழக்கு தொடரப்பட்டுள்ளது. எனவே சட்டவிரோதமான முறையி்ல சிறையில் அடைக்கப்பட்டுள்ள எங்கள் மீது போலீஸ் கமிஷனர் பிறப்பித்துள்ள குண்டர் சட்ட உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
ரங்கநாதனின் மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.ஜோதிமணி, டி.துரைசாமி உள்ளிட்டோர் நிலப்பறிப்பு புகாரில் கைது செய்யப்பட்டவரை தகுந்த காரணங்கள் இல்லாமல் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்துள்ளனர். போலீஸ் கமிஷனர் பிறப்பித்த குண்டர் சட்ட உத்தரவு சட்ட விரோதமானது. எனவே இந்த உத்தரவை ரத்து செய்யப்படுகின்றது. ரங்கநாதனை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்தது செல்லாது என்று நீதிபதிகள் தீர்ப்பு வழங்கினர்.
இவ்வழக்கில் மனுதாரர்கள் தரப்பில் மூத்த வழக்கறிஞர்கள் என்.ஆர்.இளங்கோ, சண்முகசுந்தரம், சரவணன் உள்ளிட்டோர் ஆஜராகினர்.
-
திமுகவின் கோட்டையை சிதறடித்த தவெக.. சென்னை அதிமுக நிர்வாகிகளை தூக்கும் அறிவாலயம்.. பின்னணி! -
கருகுது இரட்டை இலை.. திமுகவுக்கு தாவும் சி.விஜயபாஸ்கர்? பெரிய பொறுப்புடன் வரவேற்கும் மு.க.ஸ்டாலின்! -
அறிவாலயத்தை உலுக்கிய ஆய்வுக்குழு! சேகர்பாபு மீது அடுக்கப்பட்ட குற்றச்சாட்டுகள்.. டென்ஷனில் ஸ்டாலின்! -
மீண்டும் மீண்டும் அதே தவறு.. கோட்டை விடும் ஸ்டாலின், உதயநிதி.. குமுறும் திமுகவினர் -
மாட்டிவிட்ட மகளிர் உரிமைத் தொகை..பெண்களின் ஓட்டை கோட்டைவிட்ட திமுக! ஆய்வுக் குழுவின் அதிர்ச்சி தகவல் -
காவிரி நீரை கொண்டு வருவாரா விஜய்.. தண்ணீருக்கு வழியில்லாமல் குறுவை தொகுப்பா.. திமுக சரமாரி கேள்வி -
திமுக கூட்டணியில் இருந்து வெளியேறியது இந்திய கம்யூனிஸ்ட் கட்சி - வீரபாண்டியன் அறிவிப்பு! -
திமுகவை உதறும் துரை வைகோ.. மதிமுக பொதுக்குழு அதிரடி முடிவு? 2 எம்எல்ஏகள் ராஜினாமா? -
“கூட்டணியில் யாருமே இல்லாவிட்டாலும் திமுகவுக்கு கவலையில்லை.. சொந்த பலம் இருக்கு” - ஆர்.எஸ்.பாரதி -
அதிமுகவில் அடுத்த விக்கெட்! திமுகவில் இணைந்த முன்னாள் அமைச்சர் பெஞ்சமின்! -
பிரதான எதிர்க்கட்சி முதல் 2 எம்.எல்.ஏக்கள் வரை.. இதுவரை தமிழ்நாட்டில் சிபிஐ அமைத்த கூட்டணிகள் லிஸ்ட் -
ஆமை வேகத்தில் நகரும் மதுரை டைடல் பார்க்.. இளைஞர்களின் ஐடி கனவு என்னாவது? கொதிக்கும் சமூக ஆர்வலர்கள்!












Click it and Unblock the Notifications