எழிலகம் தீ விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஜெ. ஆறுதல்
சென்னை: எழிலகம் கட்டடத்தில் நடந்த தீ விபத்தில் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தீயணைப்பு அதிகாரிகளை முதலமைச்சர் ஜெயலலிதா நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.
கடந்த திங்கட்கிழமையன்று அதிகாலை சென்னை சேப்பாக்கம் எழிலக கட்டடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீயை அணைக்க முயன்ற தீயணைப்புப் படை வீரர் ஒருவர் பலியானார். மேலும் மூவர் படுகாயமடைந்தனர். இந்த சம்பவத்தில் அலுவலகத்தில் இருந்த முக்கிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின.
படுகாயமடைந்த மத்திய கோட்ட தீயணைப்பு அதிகாரி பிரியா ரவிச்சந்திரன், நிலைய தீயணைப்பு அதிகாரி முருகன் ஆகியோர் நுங்கம்பாக்கம் அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களை முதலமைச்சர் ஜெயலலிதா வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அப்போது பிரியா ரவிச்சந்திரனுக்கு 45 சதவீத தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
அவர் உடல் நிலை தேறி வருகிறதுஇருப்பினும், அவருக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை தேவைப்படுகிறது, ப்ளாஸ்டிக் சர்ஜரி செய்து அவர் உடல் நலம் குணமடைய மூன்று மாதங்கள் ஆகும் என்றும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இருவருக்கும் தேவையான அனைத்து உதவிகளும் செய்யப்படும் என்று அவர்களின் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் ஜெயலலிதா கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications