இங்கிலாந்துக்கான இந்தியாவின் புதிய தூதராக ஜெய்மினி பகவதி நியமனம்
Subscribe to Oneindia Tamil
லண்டன்: இங்கிலாந்து நாட்டிற்கான இந்தியாவின் புதிய தூதராக ஜெய்மினி பகவதி நியமிக்கப்பட்டுள்ளார். இவர் பிப்ரவரி 10ம் தேதி லண்டனில் இந்தியாவின் தூதராக பொறுப்பு ஏற்பார்.
1976ம் ஆண்டு பேட்ச் ஐஎப்எஸ் அதிகாரியான இவர், கடந்த 33 ஆண்டுகளாக வெளியுறவு அமைச்சகம், நிதியமைச்சகம் மற்றும் மேற்கு வங்க மாநிலத்தில் பல்வேறு துறைகளில் பல்வேறு உயர் பதவிகளில் இருந்துள்ளார்.
கடந்த 2008ம் ஆண்டு முதல் பெல்ஜியம், லக்சம்பர்க் மற்றும் ஐரோப்பிய யூனியனுக்கான இந்தியத் தூதராக பணியாற்றி வருகிறார்.
மேலும், வாஷிங்டன் நகரில் உலக வங்கியில் தலைமை நிதி அதிகாரியாகவும் பணியாற்றியுள்ளார்.
இந் நிலையில் இவர் இங்கிலாந்துக்கான இந்தியத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications