ஆஸ்திரேலியாவில் மகாத்மா காந்தியின் வெண்கலை சிலை திறப்பு
மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் நாட்டு தந்தை மகாத்மா காந்தியின் வெண்கல திருஉருவ சிலையை தெற்கு ஆஸ்திரேலிய மாகாண முதல்வர் ஜாய் வெல்த்திரில் திறந்து வைத்தார்.
மகாத்மா காந்தி போதித்து வந்த அகிம்சை கொள்கைக்கு உலகம் முழுவதும் பெரும் மதிப்பும், மரியாதையும் உள்ளது. இதனால் ஆஸ்திரேலியாவின் தெற்கு பகுதியில் உள்ள அடிலெய்ட் பல்கலைக் கழகத்தில் 1.95 மீட்டர் உயரம் கொண்ட வெண்கலத்திலான சிலை வடிவமைக்கப்பட்டது.
தெற்கு ஆஸ்திரேலிய முதல்வர் ஜாய் வெல்த்திரில் காந்தி சிலையை திறந்து வைத்தார். சிலையில் தத்துவ வாசகமும் பொறிக்கப்பட்டுள்ளது. காந்தி சிலை திறப்பு விழாவில் பல்கலைக் கழக வேந்தர், துணை வேந்தர், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
மகாத்மா காந்தி சிலையை திறந்து வைத்து ஜாய் வெத்ரில் கூறியதாவது,
மகாத்மா காந்தியின் இந்த வெண்கலை சிலையானது இந்தியாவுக்கும் தெற்கு ஆஸ்திரேலியாவுக்கும் இடையே நீண்டகாலமாக இருந்து வரும் நட்பை உறுதிபடுத்தும் வகையில் உள்ளது. ஒரு மாபெரும் ஜனநாயக நாடாக விளங்கும் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றது. ஆராய்ச்சி மற்றும் கல்வியில் இரு நாடுகளும் ஒருமித்த கருத்துடன் மட்டுமல்லாது ஒருங்கிணைந்து செயல்பட்டு வருகின்றது என்றார்.
இந்திய அரசு இந்த சிலையை ஆஸ்திரேலியாவுக்கு பரிசாக கொடுத்துள்ளது என்பது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications