For Daily Alerts
Just In
‘தானே’ புயல் நிவாரண நிதி: ரூ.19.81 கோடி திரண்டது
சென்னை: தானே புயல் நிவாரண நிதியாக 19 கோடியே 81 லட்ச ரூபாய் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வந்துள்ளதாக தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாதம் 30 ம்தேதி வங்கக் கடலில் உருவான தானே புயல் கடலூருக்கும், புதுச்சேரிக்கும் இடையே கரையை கடந்தது. இதில் கடலூர், விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டன. வாழ்வாதாரங்களை இழந்து தவிக்கும் மக்களுக்கு உதவ பொதுமக்கள் தாராளமாக நிதி உதவி வழங்கவேண்டும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா கேட்டுக்கொண்டார். இதனையடுத்து பல தரப்பில் இருந்தும் நிவாரணம் குவியத்தொடங்கியுள்ளது.
19 கோடி திரண்டது
புயல் நிவாரண நிதியாக முதலமைச்சர் பொது நிவாரணத் தொகையில் ஜன.20ம் தேதி வரை ரூ.19,81,22,769 சேர்ந்துள்ளதாக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
English summary
The Total amount received in finance department including amount through CM office towards Chief Minister public relief fund in connection with ‘Thane’ cyclone relief measures as an 20th January Rs. 19,81,22,769/-
Story first published: Saturday, January 21, 2012, 10:22 [IST]