கலைஞர் அறிவாலய திறப்பை முடக்க சாமிநாதன் கைது-திமுக புகார்

Subscribe to Oneindia Tamil

திருப்பூர்: திருப்பூரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் அறிவாலயத் திறப்பு விழாவை முடக்கும் வகையிலேயே முன்னாள் அமைச்சர் வெள்ளக்கோவில் சாமிநாதன் கைது செய்யப்பட்டுள்ளதாக திமுகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவிலை அடுத்துள்ள முத்தூரில் உள்ள சாமிநாதன் வீட்டுக்கு இன்று அதிகாலை சென்ற போலீஸார் அவரை நில அபகரிப்பு வழக்கில் கைது செய்தனர். இதனால் திருப்பூர் திமுகவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இது அரசியல் ரீதியான பழிவாங்கல் நடவடிக்கை என்று அவர்கள் குற்றம் சாட்டியுள்ள்ளனர்.

ஆனால், கோவை கொடிசியா அரங்கம் அருகே கோபிநாத் என்பவருக்கு சொந்தமான இடத்தை அபகரித்ததாகவும், அவருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், சாமிநாதன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ஆனால் இதை திருப்பூர் திமுகவினர் மறுக்கின்றனர். திருப்பூர் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தை, கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் வரும் 29ஆம் தேதி திறந்து வைக்கவுள்ளார். இந்த நிகழ்ச்சியை முடக்கவும், குழப்பம் விளைவிக்கும் நோக்கிலேயே சாமிநாதனை போலீஸார் கைது செய்துள்ளனர் என்று அவர்கள் கூறுகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+