ராமேஸ்வரம், திருக்கடையூர் கோவில் பக்தர்களுக்கு ஓய்வு இல்லம்: ஜெ. உத்தரவு
சென்னை: மணல்மாதா திருத்தலம், ராமநாதசுவாமி திருக்கோவில் மற்றும் அருள்மிகு அபிராமி அம்மன்-அமிர்தகடேஸ்வரர் திருக்கோவில், தனுஷ்கோடி ஆகிய இடங்களில் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பக்தர்களின் நலன் கருதி பல்வேறு வசதிகள் செய்து கொடுக்க முதல்வர் ஜெயலலிதா ரூ. 3.45 கோடி நிதி ஒதுக்கியுள்ளார்.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
நாட்டின் ஒருமைப்பாட்டினை வளர்ப்பதிலும், மாணவ, மாணவியரிடையே சிந்தனை கிளர்ச்சியை ஏற்படுத்துவதிலும், அறிவுப் புரட்சியை தோற்றுவிப்பதிலும், அரசுக்கு வருமானத்தை ஈட்டித் தருவதிலும், சுற்றுலா முக்கிய பங்காற்றுகிறது என்று சொன்னால் அது மிகையாகாது.
தொடர்ந்து அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா அவர்கள் தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் அடிப்படையில் தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகில், சொக்கன் குடியிருப்பில் உள்ள மணல்மாதா திருத்தலத்திற்கு வருகை புரியும் சுற்றுலாப் பயணிகளின் நலனுக்காக, இத்திருத்தலப் பகுதியில் பயணிகளின் வாகனம் பாதுகாப்பாக நிறுத்துவதற்கான நிறுத்துமிடம் அமைப்பதற்காக 15 லட்சம் ரூபாயும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கான குளியலறை மற்றும் கழிப்பறை கட்டுவதற்காக 4 லட்சம் ரூபாயும், காத்திருப்போர் கூடம் அமைப்பதற்காக 5 லட்சம் ரூபாயும், குடிநீர் வசதி செய்து தருவதற்காக 1 லட்சம் ரூபாயும் ஆக மொத்தம் 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதே போன்று இந்தியாவின் முக்கிய ஆன்மீக மற்றும் சுற்றுலாத் தலமாக விளங்கும் அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோவிலுக்கும், தனுஷ்கோடிக்கும் ஏராளமான பக்தர்கள் நாட்டின் பல பகுதிகளிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் வருகை புரிவதைக் கருத்தில் கொண்டு இங்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வசதிக்காக ராமேஸ்வரத்திலுள்ள தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக வளாகத்தில் 2 கோடி ரூபாய் செலவில் ஒரு சுற்றுலா ஓய்வு இல்லம் கட்டுவதற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
மேலும், நாகப்பட்டினம் மாவட்டம் திருக்கடையூரில் உள்ள பிரசித்திப்பெற்ற அருள்மிகு அபிராமி அம்மன்-அமிர்தகடேஸ்வரர் திருக்கோவிலுக்கு, 60 வயது நிறைவு மற்றும் 80 வயது நிறைவினை ஒட்டி பல்வேறு பக்தர்கள் தங்கள் உறவினர்களுடன், பூஜைகள் செய்வதற்காக அதிக அளவில் வருகை தருவதால் அவர்களின் வசதிக்காக சுற்றுலா ஒய்வு இல்லம் கட்டுவதற்காக 1 கோடியே 20 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து மாண்புமிகு தமிழக முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
இதன் மூலம் சுற்றுலாப் பயணிகளுக்கு கூடுதல் வசதிகள் கிடைப்பதுடன், சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையும் கணிசமாக அதிகரிக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications