ஒரிசா பழங்குடி மக்களை சந்திக்க வருகிறது கட்டுப்பாடுகள்

ஒரிசா மாநிலத்தின் தென்பகுதியில் மல்காங்கிரி, ராயகடா, கோரபுட், கலாண்டி உள்ளிட்ட பல மாவட்டங்களில் அழிவின் விளிம்பில் இருக்கும் பழங்குடி இனக் குழுக்கள் இன்றும் வாழ்கின்றனர்.
கொதவா, பரஜா போன்ற பல பழங்குடிகளின் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும் டோங்ரியா கோந்த், போண்டோ போன்ற இனமக்கள் இன்னமும் ஆதி வாழ்க்கையையே வாழ்ந்து வருகின்றனர்.
போண்டோ இனம் இதில் மிகவும் தனித்துவமானது. மாவோயிஸ்டுகளின் ஆதிக்கமுள்ள மல்காங்கிரி மாவட்டத்தில் போண்டோ ஹில்ஸ் என அழைக்கப்படும் மலைக்குன்றில் வசித்து வருகின்றனர். போண்டோ ஆண்கள் நம்மைப் போல் இயல்பு வாழ்க்கைக்கு பழக்கப்பட்டுவிட்டாலும் பெண்கள் இன்னமும் அரை நிர்வாணிகளாகவே வாழ்ந்து வருகின்றனர்.
தலைமுடியை மழித்தும் கழுத்து நிறைய பெரும் இரும்பு வளையங்களை அணிந்தும் மேலாடைக்குப் பதிலாக சணல் மற்றும் பாசிகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட ஒருவகை ஆடையையும் அணிந்தே வாழ்கின்றனர்.
இப்படி வாழும் பழங்குடி மக்களை முன் வைத்து ஒரிசாவில் சுற்றுலா வர்த்தகமும் களைகட்டி வருகிறது. "எத்னோ டூரிஸம்" என்றழைக்கப்படும் இந்த சுற்றுலா வர்த்தகம் பழங்குடிகளை காட்சிப் பொருளாக்கி வியாபாரமாக்குகிறது என்று சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி வந்தனர்.
இதையடுத்து ஒரிசாவின் பழங்குடி மக்கள் கிராமங்களுக்கு வெளிநாட்டவரை அழைத்துச் செல்வதற்கு புதிய விதிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இதைத் தொடர்ந்து பழங்குடி கிராமங்களுக்கு செல்லும் வெளிநாட்டவர் மாவட்ட நிர்வாகத்தின் அனுமதி சான்றிதழ் வைத்திருக்க வேண்டும் என்பது உள்ளிட்டவைகளை நடைமுறைப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளன. இது தொடர்பாக சுற்றுலா முகவர்களுடன் மாவட்டங்களின் நிர்வாகங்கள் ஆலோசனை நடத்தி வருகின்றன.
-
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அன்னைக்கே சொன்னாரே டிடிவி தினகரன்! நெருங்கும் கிளைமாக்ஸ்? பாஜக ஸ்கெட்ச்? கொத்து கொத்தாக ஓடும் தலைகள்












Click it and Unblock the Notifications