நெல் அறுவடைப் பணிகளுக்கு ஆளில்லை-தமிழகத்திலிருந்து வரவழைக்கும் கேரள அரசு ந
Subscribe to Oneindia Tamil

கேரளாவில் நெல் பயிரிடுவது என்பது அரிதான விஷயம். தற்போது குட்டநாடு பகுதியில் பஞ்சா நெல் பயிரிடப்பட்டு அறுவடைக்குக் காத்திருக்கிறது. ஆனால் அறுவடைப் பணிகளுக்கு ஆள் இல்லை. இதையடுத்து தமிழகத்திலிருந்து அறுவடைப் பணிகளுக்கு ஆட்களைக் கூட்டி வர அம்மாநில விவசாயத்துறை நடவடிக்கை எடுத்துள்ளாம்.
இதுகுறித்து மாநில விவசாயத்துறை முதன்மைச் செயலாளர் நளினி குமார் கூறுகையில், அறுவடைப் பணிகளுக்கு தமிழகத்திலிருந்து ஆட்களை அழைத்து வர மாநில வேளாண்மைத்துறை ஏற்பாடு செய்துள்ளது என்றார்.
மேலும் இதுதொடர்பாக பிப்ரவரி 7ம் தேதி விவசாயத்துறை அதிகாரிகள், விவசாயிகள் சங்கங்களின் கூட்டம் ஒன்றும் நடைபெறவுள்ளதாம். அந்தக் கூட்டத்தில் அறுவடைக்குப் பயன்படும் எந்திரங்களின் வாடகை குறித்து தீர்மானிக்கப்படவுள்ளதாம்.












Click it and Unblock the Notifications