தமிழக சட்டசபைக் கூட்டத் தொடர் 6 நாட்கள் நடைபெறும்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழக சட்டசபையின் கூட்டத் தொடர் 6 நாட்களுக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வருடத்தின் முதல் சட்டசபைக் கூட்டத் தொடர் இன்றுகாலை தொடங்கியது. ஆளுநர் ரோசய்யா உரை நிகழ்த்தி கூட்டத்தைத் தொடங்கி வைத்தார்.
ஆளுநர் உரைக்குப் பின்னர் சபாநாயகர் ஜெயக்குமார் அறையில் அவரது தலைமையில் அலுவல் ஆய்வுக் குழுக் கூட்டம் நடந்தது. இக்கூட்டத்தில் சட்டசபைக் கூட்டத் தொடரை பிப்ரவரி 4ம் தேதி வரை நடத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீது இந்த நாட்களில் விவாதம் நடைபெறும்.












Click it and Unblock the Notifications