குப்பை தொட்டியில் வீசப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள்+இந்திய ஜனநாயகம்!
நெல்லை: நெல்லையில் குப்பை தொட்டியில் நூற்றுக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்தததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
நெல்லை சந்திப்பு கெட்வெல் ஆஞ்சநேயர் கோயில் அருகே பூ மார்க்கெட் உள்ளது. இதையடுத்துள்ள கிடங்கில் குப்பையோடு குப்பையாக நூற்றுக்கணக்கான வாக்காளர் அடையாள அட்டைகள் கிடந்தன.
இவை நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில், தென்காசி, அம்பை, பாளையங்கோட்டை, நெல்லை மற்றும் தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் தொகுதிகளைச் சேர்ந்த வாக்காளர்களுக்கு உரியவை. அவற்றில் அரசு ஹோலோகிராம் முத்திரையும், தேர்தல் அதிகாரியின் கையொப்பமும் தெளிவாக உள்ளன.
இவை ஒரிஜினலா அல்லது அதே அதுபோல் தயாரிக்கப்பட்ட போலி வாக்காளர் அடையாள அட்டைகளா, இவற்றை யார் குப்பை தொட்டியில் கொட்டியது என்பது புதிராக உள்ளது. பெயர் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களுக்கு பின்பு தேவையில்லை என கைவிட்டிருந்தாலும் புத்தம் புதிதாக நூற்றுக்கணக்கில் குப்பை தொட்டியில் கொட்டப்பட்டிருக்க வாய்ப்பில்லை. மேலும் இரு மாவட்ட வாக்காளர் அடையாள அட்டைகளும் கணிசமாக உள்ளன. எனவே கடந்த சட்டசபை தேர்தலில் கள்ள ஓட்டு போட பயன்படுத்தப்பட்டதா என்ற சந்தேகம் எழுகிறது.
இது குறித்து நெல்லை கலெக்டர் செல்வராஜ் கூறுகையி்ல், வாக்காளர் அடையாள அட்டை குப்பை தொட்டியில் வீசியிருப்பதன் மூலம் ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை என்பதையே காட்டுகிறது. ஒருவேளை அதிகாரிகள் இதை செய்திருந்தால் அது மிகப்பெரிய குற்றமாகும். அடையாள அட்டை முக்கிய ஆவணமாகும். இதை பொறுப்பாக வாக்காளர்களிடம் ஒப்படைக்க வேண்டும். இது அதிகாரிகளின் தவறாக இருந்தால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடு்மையமைக தண்டிக்கப்படுவர் என்றார்.












Click it and Unblock the Notifications