ஆளுநர் உரை எதிர்பார்த்தது போல இல்லை-விஜயதாரணி ஏமாற்றம்!

Subscribe to Oneindia Tamil

Vijayadharani
சென்னை: தமிழக சட்டசபையில் இன்று ஆளுநர் ரோசய்யா வாசித்த உரை, எதிர்பார்த்தது போல இல்லை என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ விஜயதாரணி கூறியுள்ளார்.

ஆளுநர் உரை குறித்து எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்துள்ளன. காங்கிரஸ் உறுப்பினர் விஜயதாரணி பேசுகையில், ஆளுநர் உரை காங்கிரஸ் கட்சி எதிர்பார்த்தது போல இல்லை. மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளனர். ஆனால் அந்த குற்றச்சாட்டுக்களில் தெளிவு இல்லை என்றார்.

புதிதாக ஏதுமில்லை-சிபிஎம்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் செளந்தரராஜன் பேசுகையில், ஆளுநர் உரையில் சொல்லிக்கொள்ளும்படி புதிதாக எதுவும் இல்ைல. ஏற்கனவே முதல்வர் அறிவித்த திட்டங்களின் தொகுப்பாகவே உள்ளது. கூடங்குளம் குறித்து எதுவும் இல்லை.

தொழில் வளர்ச்சி, வேலைவாய்ப்பு அதிகரிப்பு குறித்த திட்டங்கள் ஏதும் இல்லை. மின்சாரப் பற்றாக்குறை தொடரும் நிலையே உள்ளது. அதைத் தீர்க்க திட்டங்கள் இல்லை என்றார்.

ஏமாற்றம் தருகிறது-காடுவெட்டி குரு

பாமக உறுப்பினர் காடுவெட்டி குரு கூறுகையில், இந்த ஆளுநர் உரை ஏமாற்றம் அளிப்பதாக உள்ளது.புயலால் பாதிக்கப்பட்ட கடலூர், விழுப்புரம் மாவட்டங்களுக்கு நிரந்தரத் தீர்வு எதுவும் அறிவிக்கப்படவில்லை. மின் தட்டுப்பாட்டுக்கு தீர்வு இல்லை என்றார்.

சரத்குமார் வரவேற்பு

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் ஆளுநர் உரையை வரவேற்றுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், தமிழகத்தை நாட்டிலேயே முன்னணி மாநிலமாக மாற்ற பல நல்ல முன்னேற்றத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.இதற்காக முதல்வரை நான் பாராட்டுகிறேன், நன்றி கூறுகிறேன் என்றார்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+