வீரபாண்டி ஆறுமுகம் தம்பி மகன் சுரேஷ் குமாருக்கு குண்டாஸ்
சேலம்: முன்னாள் திமுக அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகனான பாரப்பட்டி சுரேஷை குண்டர் தடை சட்டத்தின் கீழ் போலீஸார் கைது செய்துள்ளனர்.
வீரபாண்டி ஆறுமுகத்தின் தம்பி மகன் பாப்பட்டி சுரேஷ். இவர் சேலம் மாவட்ட ஊராட்சிக் குழுவின் முன்னாள் துணைத் தலைவராக இருந்தவர். இவர் மீது அதிமுக ஆட்சிக்கு வந்ததும் ஏராளமான வழக்குகள் பாய்ந்தன.
சேலம் அங்கம்மாள் நகர், பிரிமியர் மில் நிலங்களை அபகரித்தது, சேலம் மாவட்டம் சுக்கம்பட்டி கிராமத்தில் விவசாயி ஒருவரின் 2 ஏக்கர் நிலத்ைத மிரட்டிப் பறித்தது உள்ளிட்ட பல நில அபகரிப்பு வழக்குகள் உள்ளன.
இந்த நிலையில் இவரை குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய காவல்துறையினர் பரிந்துரைத்தனர். இதையடுத்து தற்போது சுரேஷ் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர்.
பாரப்பட்டி சுரேஷ் சேலம் சிறையில் அடைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications