காமன்வெல்த் போட்டி நிதி ஒதுக்கீட்டில் ப.சி. இழுத்தடித்தார்: பிரதமருக்கு ஷீலா தீட்சித் கடிதம்

Subscribe to Oneindia Tamil

Chidambaram and Sheila Dikshit
டெல்லி: காமன்வெல்த் போட்டிகளுக்கான நிதியை ஒதுக்குவதற்கு அப்போது அமைச்சராக இருந்த ப.சிதம்பரம் மிகவும் இழுத்தடித்தார் என்று பிரதமர் மன்மோகன்சிங்குக்கு எழுதிய கடிதம் ஒன்றில் டெல்லி முதல்வர் ஷீலா தீட்சித் குற்றம்சாட்டியுள்ளார்.

கடந்த ஆண்டு மார்ச் 28-ந் தேதி மன்மோகனுக்கு இக்கடிதத்தை ஷீலா தீட்சித் எழுதியிருக்கிறார்.

காமன்வெல்த் போட்டி முறைகேடுகள் தொடர்பாக 2010 ஆம் ஆண்டு அக்டோபர் 25-ந் தேதியன்று வி.கே.சுங்குலு தலைமையிலான குழுவை மன்மோகன்சிங் அமைத்து உத்தரவிட்டிருந்தார்.

இக்குழுவின் அறிக்கை 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியானது. அதில் டெல்லி மாநில அரசு மீது குற்றம்சாட்டப்பட்டிருந்தது.

இதைத் தொடர்ந்து மன்மோகனுக்கு கடிதம் எழுதிய ஷீலா தீட்சித், தமது அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில்தான் சுங்குலு கமிட்டி அறிக்கையின் குற்றச்சாட்டுகள் இருப்பதாக குமுறியுள்ளார்.

மேலும் அப்போது நிதி அமைச்சராக இருந்த ப.சிதம்பரம், காமன்வெல்த் போட்டிகளுக்கான நிதியை ஒதுக்குவதில் மிகவும் தாமதம் செய்ததாகவும் ஷீலா கூறியுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+