சட்டசபையில் எவ்வாறு நடந்து கொள்வது-கருணாநிதி தலைமையில் திமுக எம்.எல்.ஏக்கள் ஆலோசனை
சென்னை: சட்டசபையில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்து திமுக தலைவர் கருணாநிதி தலைமையில் சென்னையில் திமுக எம்.எல்.ஏக்கள் கூடி ஆலோசனை நடத்தினர்.
கடந்த ஆண்டு, அதிமுக ஆட்சிக்கு வந்த பின்னர் நடந்த பட்ஜெட் கூட்டத் தொடரில் திமுக தொடர்ந்து வெளிநடப்பு செய்து வந்தது. திமுகவினருக்கான இடங்கள் ஒதுக்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தியால் இந்த வெளிநடப்பு.
இந்த நிலையில் நேற்று இந்த ஆண்டின் முதல் கூட்டத் தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போதும் திமுக ஆளுநர் உரையைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தது.
இந்தக் கூட்டத் தொடர் 6 நாட்கள் நடைபெறவுள்ளது. இந்த நிலையில், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு நடந்து கொள்வது என்பது குறித்த ஆலோசனை கூட்டம் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று மாலை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின், துரை முருகன் எம்.எல்.ஏ. உள்பட அனைத்து தி.மு.க. எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொண்டனர். சட்டசபை கூட்டத்தில் தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் எவ்வாறு செயல்படுவது என்பது குறித்த அறிவுரைகளை தி.மு.க. தலைவர் கருணாநிதி வழங்கினார்.












Click it and Unblock the Notifications