எனது உறவினர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம்: ஜெ.வுக்கு ராஜபக்ச வேண்டுகோள்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு: தமிழ்நாட்டுக்கு வருகை தரும் இலங்கை அமைச்சர்கள் மற்றும் தமது உறவினர்கள் மீது தாக்குதல் நடத்த வேண்டாம் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு இலங்கை அதிபர் ராஜபக்சே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராஜபக்சவின் சகோதரியின் கணவரான நடேசன், சில வாரங்களுக்கு முன்பு ராமேஸ்வரம் வருகை தந்திருந்தார். ஈழத் தமிழர்களை படுகொலை செய்த பாவத்தை போக்குவதற்காக யாகம் நடத்த அவர் முயற்சித்தார்.

ஆனால் தமிழின உணர்வாளர்கள் இதைத் தடுத்து நடேசனையும் நையப்புடைத்து விரட்டினர்.

இச்சம்பவம் தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ராஜபக்ச, தமது மைத்துனர் ஒரு இந்துதான் என்றும் அவர் இலங்கையில் தமிழர்கள் வாழும் பகுதியில் பிறந்தவர்தான் என்றும் கூறியுள்ளார்.

மேலும் தமிழ்நாட்டுக்கு வருகை தரும் தமது உறவினர்கள் மற்றும் இலங்கை அமைச்சர்களை தமிழக முதல்வர் ஜெயலலிதா பாதுகாக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டின் டியுசிஎஸ் கடைகளில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட பொருட்களை விற்பனை செய்வதற்கு தடை விதிக்கபட்டுள்ளதற்கும் ராஜபக்ச கவலை தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+