2ஜி தீர்ப்புக்கு வரவேற்பு - பாஜகவும் பொறுப்பு: ஏ.பி.. பரதன் குற்றச்சாட்டு
Subscribe to Oneindia Tamil
டெல்லி: 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்கில் உச்சநீதிமன்றம் நல்ல தீர்ப்பை அளித்துள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் ஏ.பி. பரதன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து ஏ.பி. பரதன் கூறியுள்ளதாவது:
உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு மிக நல்ல தீர்ப்பு. முறைகேடுகளை தடுத்திருக்க வேண்டியது அப்போது நிதி அமைச்சராக இருந்த சிதம்பரத்தின் கடமை. அதை அவர் செய்யவில்லை. குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்திருக்கிறார். சிதம்பரம் தமது பொறுப்பை நிறைவேற்றவில்லை.
முதலில் விண்ணப்பித்தோருக்கு முன்னுரிமை என்ற கொள்கையைக் கடைபிடித்த பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான முந்தைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசும் தமது பொறுப்பிலிருந்து தப்பிவிட முடியாது என்றார் அவர்.












Click it and Unblock the Notifications