For Daily Alerts
Just In
அஸ்ஸாமில் ஜேசிபி எந்திரம் மீது மோதி ரயில் தடம் புரண்டது: 3 பேர் பலி, 50 பேர் காயம்
குவாஹாத்தி: அஸ்ஸாம் மாநிலம் குவாஹாத்தி அருகே பொங்கைகாவ்ன்-குவாஹாத்தி பயணிகள் ரயில் தடம் புரண்டதில் 3 பேர் பலியாகியுள்ளனர், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
அஸ்ஸாம் மாநிலம் பொங்கைகாவ்னில் இருந்து குவாஹாத்தி சென்ற பொங்கைகாவ்ன்-குவாஹாத்தி பயணிகள் ரயில், தண்டவாளத்தில் பழுதடைந்து நின்றிருந்த ஒரு ஜே.சி.பி. பொக்லைன் எந்திரம் மீது மோதியது.
இதில் ரயிலின் ன் 4 பெட்டிகள் தடம் புரண்டன. இந்த விபத்தில் 3 பேர் பலியாகியுள்ளனர், 50க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசாரும், மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். மீட்பு பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றது.
Comments
English summary
A trian mishap took place in Guwahati, Assam on Friday, Feb 3 leaving 3 dead and 50 injured. The accident took place after 4 bogies of Bongaigaon-Guwahati passenger train derailed.
Story first published: Friday, February 3, 2012, 17:21 [IST]