'சீரியஸ்' சட்டசபையில் 'ஷார்ட் ஜம்ப்... லாங் ஜம்ப்...' ஏற்படுத்திய சிரிப்பலை!
சென்னை: பஸ் கட்டண உயர்வை ஷார்ட் ஜம்ப் போல மெதுவாக உயர்த்தால் லாங் ஜம்ப் போல அரசு உயர்ததி விட்டது என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ ரங்கராஜ் கூற, அதற்கு முதல்வர் ஜெயலலிதா அளித்த பதிலால் சட்டசபையே குலுங்கிச் சிரித்தது.
தேமுதிக-அதிமுக மோதலால் அவையே இறுக்கத்தில் இருந்த நிலையில் இந்த கேள்வி, பதில் அவையில் சிரிப்பலைகளை ஏற்படுத்தி இறுக்கத்தை சற்றே தணித்தது.
சட்டசபையில் நேற்று காங்கிரஸ் உறுப்பினர் ரங்கராஜன் விவாதத்தில் கலந்து கொண்டு பேசினார். இந்த கவர்னர் உரையில் நிறைய எதிர்பார்த்தோம். ஆனால் ஏமாற்றம் என்று அவர் ஆரம்பித்தபோது முதல்வர் ஜெயலலிதா குறுக்கிட்டார்.
அவர் பதிலளிக்கையில்,நாங்களும் மத்திய அரசிடம் எதிர் பார்த்து எதிர்பார்த்து கடைசியில் ஏமாற்றம் தான் என்றார்.
தொடர்ந்து பேசிய ரங்கராஜ், பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் நிர்வாகத்தை நடத்த முடியாது. ஆனால் ஒரே அடியாக லாங் ஜம்ப் போல உயர்த்தி இருக்கக் கூடாது. ஷார்ட் ஜம்ப் போல கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி இருக்கலாம் என்று குறிப்பிட்டார்.
அதற்குப் பதிலளித்த ஜெயலலிதா, மத்திய அரசு டீசல் மற்றும் பெட்ரோல் விலையை ஷார்ட் ஜம்ப்பாக கொஞ்சம் கொஞ்சமாக உயர்த்தி வருகிறது. இதனால்தான் நாங்கள் வேறு வழியின்றி லாங் ஜம்ப்பாக உயர்த்தி வேண்டிய நிலை ஏற்பட்டது என்று கூற அவையில் 'கொல்'லென்று சிரிப்பலை எழுந்தது.












Click it and Unblock the Notifications