விஜயகாந்த்தை சஸ்பெண்ட் முடிவை மறு பரிசீலனை செய்யுங்கள்- காங்கிரஸ்
Subscribe to Oneindia Tamil
சென்னை: எதிர்க்கட்சித் தலைவர் விஜயகாந்ததை சட்டசபையிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ள முடிவை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், சட்டப்பேரவை என்பது மக்கள் பிரச்னையை விவாதிக்கின்ற இடமாக இருக்க வேண்டும். இந்தப் பிரச்னையில் யார் சரி? யார் தவறு? என்கிற வாதங்களைவிட எதிர்க்கட்சித் தலைவரை சபையை விட்டு நீக்குவது என்பது ஒரு தவறான முன்னுதாரணமாக ஆகிவிடும்.
எதிர்க்கட்சித் தலைவர் எல்லாவிதத்திலும் தனி அந்தஸ்தை பெறுகிறார். ஆகவே அவரது நீக்க முடிவை மறுபரிசீலனை செய்து, அவர் தன்னுடைய ஜனநாயக கடமையை சபைக்குள் ஆற்றுவதற்கு வழிவகுக்க வேண்டும்.
சட்டப்பேரவை சுமூகமாக நடைபெற அனைத்துத் தரப்பினரும் உதவிட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications