ஈரானிடம் 4 அணுகுண்டு தயாரிக்கும் திறன்: 100 குண்டு வைத்துள்ள இஸ்ரேல் அலறல்!

தற்போதைக்கு இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் கண் பார்வை ஈரான் மீது தீவிரமாக படிந்துள்ளது. எந்த வகையில் ஈரானை முடக்கலாம் என்று இரு நாடுகளும் 'ரூம்' போடாத குறையாக யோசித்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் ஜெருசலேத்தில் நடந்த மாநாடு ஒன்றில் பேசிய இஸ்ரேல் நாட்டு ராணுவ புலனாய்வுப் பிரிவு தலைவர் ஜெனரல் அவிவ் கொச்சாவி கூறுகையில்,
நான்கு அணுகுண்டுகளைத் தயாரிக்கத் தேவையான கதிர்வீச்சுப் பொருட்களை ஈரான் தன் வசம் வைத்துள்ளது. ஈரானிடம் தற்போது கிட்டத்தட்ட 100 கிலோ யுரேனியம் உள்ளது. இதில் 20சதவீதம் செறிவூட்டப்பட்டதாகும். இதை வைத்து 4 அணு குண்டுகளைத் தயாரிக்க முடியும்.
தனது அணு ஆயுத தயாரிப்பை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது ஈரான். அதன் அணு ஆயுத இருப்பை பலப்படுத்தி வருகிறது. அதற்கான ஆதாரங்கள் எங்களிடம் உள்ளன.
உத்தரவிடப்பட்ட ஒரு வருடத்தில் ஒரு அணு ஆயுதத்தை அவர்களால் தயாரிக்க முடியும். அந்த அளவுக்கு அவர்கள் வளர்ந்துள்ளனர்.
ஈரானின் அணு ஆயுதத் திடடம் குறித்து இஸ்ரேலும் சர்வதேச நாடுகள் பலவும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்ற போதிலும் இதுவரை ஈரானுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்காமல் இருப்பது வருத்தம் தருகிறது.
ஈரான் மீது மிகக் கடுமையான பொருளாதாரத் தடைகளைக் கொண்டு வர வேண்டும். தேவைப்பட்டால் ஈரான் மீது தாக்குதல் நடத்த எங்களுக்கு உரிமை உள்ளது என்பதை இந்த நேரத்தில் மீண்டும் வலியுறுத்திக் கூறிக் கொள்கிறோம் என்றார்.
ஈரானிடம் நான்கு குண்டுகள் இருப்பதாக பீதி அடையும் இஸ்ரேல், மத்திய கிழக்கு ஆசியாவிலேயே அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ள ஒரே நாடாக திகழ்கிறது. இந்த நாட்டிடம் 100 முதல் 130 அணு ஆயுதங்கள் வரை இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இது குறித்து இஸ்ரேல் இதுவரை வாயைத் திறந்ததே இல்லை. அதன் ஆதரவு கரமான அமெரிக்காவும் கூட இதுகுறித்துக் கவலைப்பட்டதே இல்லை.
கொச்சாவி மேலும் பேசுகையில், ஈரானின் தற்போது திட்டமாக இஸ்ரேல் மீது அணு ஆயுத்த தாக்குதல் நடத்துவதுதான்.தனது தாக்குதலை சிரியா, லெபனான் வழியாக நடத்த அது திட்டமிட்டுக் கொண்டிருக்கிறது. ஈரானிலிருந்து கூட தாக்குதல் நடத்த அது திட்டமிட்டுவருகிறது. இஸ்ரேல் தலைநகர் டெல்அவிவ் மற்றும் பல முக்கிய நகரங்கள் ஈரானின் தாக்குதல் எல்லைக்குள் இருக்கிறது.இது எங்களுக்குக் கவலை தருகிறது என்றார்.
-
"டார்க்" பாதை.. ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சீக்ரெட்டாக போன 70+ கப்பல்கள்.. இது எப்படி சாத்தியம்? -
Kuwait மீது திடீர் தாக்குதல் நடத்திய ஈரான்.. திரும்பும் பக்கமெல்லாம் ஏவுகணை சந்தம்.. பீதியில் மக்கள்! -
ஈரானின் முதுகெலும்பில் தாக்கிய CENTCOM.. டிரம்ப் போட்டுக்கொடுத்த பிளான்..? கச்சிதமாக முடித்த US Army! -
பைத்தியக்காரனா நீ? நெதன்யாகுவை திட்டி தீர்த்த டிரம்ப்.. இஸ்ரேல் செய்த வேலையால் ஈரான் எடுத்த முடிவு! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications