அதிமுக, திமுகவினர் அண்ணா நினைவு தினம் அனுசரிப்பு
செங்கோட்டை: பேரறிஞர் அண்ணாவின் 43வது நினைவு நாளை ஓட்டி அவரது சிலைக்கு செங்கோட்டை நகர திமுக மற்றும் அதிமுக சார்பில் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது
அதிமுகவின் செங்கோட்டை நகர செயலாளர் தங்கவேலு, யூனியன் சேர்மன் முருகையா, நகர அவைத் தலைவர் பூசை ராஜா, நகர்மன்ற துணை தலைவர் கணேசன், நகர்மன்ற உறுப்பினர்கள் கிருஷ்ணமுரளி, செந்தில் ஆறுமுகம், சுந்தரம், ராஜகோபால், நகர துணை செயலாளர் ராஜா, மாவட்ட மருத்துவர் அணி இணை செயலாளர் சுப்பிரமணியன், வழக்கறிஞர் அருண், அண்ணா தொழிற்சங்க மாவட்ட தலைவர் சிவணு பாண்டியன், பொருளாளர் ராமைய்யா, முன்னாள் நகர்மன்ற உறுப்பினர்கள் சுப்பிரமணியன், செல்வகணேசன், சுப்புராஜ், மாவட்ட பிரதிநிதி லெட்சுமணன், மாவட்ட கவுன்சிலர் ராமசந்திரன், மேலூர் செல்லசாமி, ஐயப்பன், முகைதீன் பிச்சை, முத்துராஜ், லிங்கம், அருணாசலம், முத்தையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நினைவஞ்சலி செலுத்தினர்.
திமுகவினர் அனுசரிப்பு
செங்கோட்டை நகர திமுக சார்பில் தலைமை கழக பேச்சாளரும், கலைஞர் தமிழ்சங்க செயலாளருமான சாட்டையடி சக்திவேல் தலைமையில் நகர திமுக பொருளாளர் ஜெயராஜ் முன்னிலையில் செங்கோட்டை காவல் நிலையம் அருகே உள்ள பேரறிஞர் அண்ணா அவர்களின் உருவ சிலைக்கு நகர திமுகவின் சார்பில் மாலை அணிவித்து நினைவஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் குத்தாலிங்கம், திமுக வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் மற்றும் அணிகளின் நிர்வாகிகள், வட்ட செயலாளர்கள், பிரதிநிதிகள் பெருமளவில் கலந்து கொண்டு பேரறிஞர் அண்ணா அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தினர்.












Click it and Unblock the Notifications