Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

நிலத்தகராறு: சேலம் அருகே மதிமுக செயலாளர் கைது !

Subscribe to Oneindia Tamil

நங்கவள்ளி : நிலத்தகராறில் பெண் ஒருவரை தாக்கியதாக சேலம் அருகே ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் உள்ளிட்ட இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சேலம் அருகே ஜலகண்டபுரம், சித்தாயிகாடு பகுதியை சேர்ந்தவர் வசந்தி. அதே பகுதியை சேர்ந்தவர் வைகோ மாரியப்பன். இவர் ம.தி.மு.க. நங்கவள்ளி ஒன்றிய செயலாளராக பதவி வகுத்து வருகின்றார்.

ஜலகண்டபுரம் அருகே, கோபால் என்பவரது நிலத்தை வருவாய்துறையினர் அளந்துள்ளனர். இதற்கு வசந்தி தான் காரணம் என கோபால் கடும் கோபம் அடைந்தார். இதனால், நிலம் தொடர்பாக வசந்திக்கும், கோபாலுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், வசந்தியை கோபாலும், ம.தி.மு.க. நங்கவள்ளி ஒன்றிய செயலாளர் வைகோ மாரியப்பனும் தாக்கியதாக கூறப்படுகின்றது.

இதில் படுகாயம் அடைந்த வசந்தி ஜலகண்டபுரம் காவல் நிலைத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் வழக்கு பதிவு செய்த போலீஸார் வசந்தியை தாக்கிய கோபாலையும், ம.தி.மு.க. ஒன்றிய செயலாளர் வைகோ மாரியப்பனையும் கைது செய்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+