நிவாரண தொகை வழங்காத முலாயம் சிங் மீது செருப்பு வீசிய பெண்
லக்னோ: உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த சமாஜ்வாதி கட்சித் தலைவர் மீது பெண் ஒருவர் செருப்பை வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
உத்தரப்பிரதேச மாநிலம் பாபேரு என்ற இடத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் முலாயம் பேசினார்.. பிரச்சாரம் முடித்து அவர் புறப்பட்டபோது கூட்டத்தில் இருந்த ஒரு பெண், முலாயம்சிங்கை நோக்கி செருப்பை வீசினார். அந்த செருப்பு முலாயம்சிங் யாதவின் அருகில் விழுந்தது.
செருப்பு வீச்சு ஏன்?
உடனடியாக அருகில் இருந்த போலீசார் அந்த பெண்ணை மடக்கிப்பிடித்து கைது செய்தனர். விசாரணையில் அந்த பெண் சமூகவிரோதிகளால் கடந்த 2009-ம் ஆண்டு கற்பழிக்கப்பட்டவர் என்றும், அவருக்கு நிவாரண தொகையாக ரூ.2 லட்சம் வழங்குவதாக அறிவித்த முலாயம்சிங், இதுவரை வழங்காததால் அவர் மீது செருப்பு வீசியதாகவும், அந்த பெண் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications