ஏர்செல்-மேக்சிஸ் விவகாரம்: மாறன் சகோதரர்கள் மீது அன்னிய செலாவணி மோசடி வழக்கு பதிவு

ஏர்செல்-மேக்ஸிஸ் ஒப்பந்தம் மூலம் இவர்கள் முறைகேடாக ரூ.550 கோடி அளவிற்கு பணம் ஈட்டியதாக இந்த வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்தி வரும் நிலையில், இன்று அமலாக்கப் பிரிவினர் இந்த வழக்கை பதிவு செய்து எப்ஐஆரும் பதிந்துள்ளனர்.
சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டம் (Prevention of Money Laundering Act-PMLA), அன்னிய செலாவணி மேலாண்மை சட்டம் (Foreign Exchange Management Act-FEMA) ஆகிய பிரிவுகளின் கீழ் இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இதில் சட்ட விரோத பண பரிமாற்ற தடுப்புச் சட்டம் மிக மிகக் கடுமையானதாகும். இதன் கீழ் சன் டிவி மற்றும் மாறன் சகோதரர்களின் சொத்துக்களைக் கூட முடக்கும் அதிகாரம் அமலாக்கப் பிரிவுக்கு உண்டு.
2ஜி லைசென்ஸ் பெற சிவசங்கரனின் ஏர்செல் நிறுவனம் விண்ணப்பித்தபோது அமைச்சராக இருந்த தயாநிதி மாறன் இழுத்தடித்ததாகவும், பின்னர் ஏர்செல் நிறுவனத்தை மலேசியாவைச் சேர்ந்த அனந்தகிருஷ்ணனுக்குச் சொந்தமான மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்குமாறு நிர்பந்தப்படுத்தியதாகவும், இந்த நெருக்குதலால் ஏர்செல் நிறுவனத்தை சிவசங்கரன் மேக்சிஸ் நிறுவனத்துக்கு விற்றதாகவும், இதன் பிறகு ஏர்செல் நிறுவனத்துக்கு 2ஜி லைசென்ஸை தயாநிதி மாறன் ஒதுக்கித் தந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து சன் டைரக்ட் நிறுவனத்தில் அனந்தகிருஷ்ணனுக்குச் சொந்தமான அஸ்ட்ரோ ஆல் ஏசியா நெட்வொர்க் நிறுவனம் ரூ. 550 கோடி அளவுக்கு முதலீடு செய்தது. செளத் ஏசியா எண்டர்டெயின்மெண்ட் ஹோல்டிங்ஸ் என்ற துணை நிறுவனம் மூலமாக இந்தப் பணத்தை முதலீடு செய்தார் அனந்தகிருஷ்ணன்.
இதன்மூலம் மாறன் சகோதரர்கள் ரூ. 550 கோடி அளவுக்கு முறைகேடாக லாபம் அடைந்ததாக அமலாக்கப் பிரிவு கூறியுள்ளது.
இந்தக் குற்றச்சாட்டையடுத்து கடந்த ஆண்டு மத்திய ஜவுளித்துறை அமைச்சர் பதவிலியிருந்து விலக நேர்ந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்தக் குற்றச்சாட்டுகளை தயாநிதி மாறன் மறுத்து வந்தாலும், இது தொடர்பாக சிபிஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
-
Thaai Kizhavi OTT: ஓடிடியில் வெளியாகும் தாய் கிழவி.. எப்போது, எதில் பர்க்கலாம்? வெளியான தகவல் -
அரபு நாடுகளில் இந்தியர்களின் 12, 000 கோடி முதலீடு காலி.. 800 நிறுவனங்கள் எதிர்காலம் கேள்விக்குறி! -
கோவை தெற்கில் களமிறங்கும் மகேந்திரன்.. ஆதரவாக இருக்கும் செந்தில் பாலாஜி.. கணக்கு போடும் ஸ்டாலின்! -
ஆதவ் அர்ஜுனா உடைத்த அடுத்த பர்னிச்சர்.. தவெக நிர்மல்குமாரின் பதிவும் ஒரே வார்த்தையில் காலி -
திருப்பரங்குன்றம் வழக்கு.. நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் உத்தரவுக்கு இரு நீதிபதிகள் அமர்வு இடைக்கால தடை -
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
காட்டி கொடுக்கும் ரஷ்யா.. அமெரிக்க படைகள் தலைக்கு மேல் சுற்றும் கத்தி.. பெரிய சிக்கலில் டிரம்ப்? -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
ஆதவை கண்டித்த ரஜினிகாந்த்..பாஜக சரத்குமாரை எப்போது கண்டிப்பிங்க.. வீடியோவால் சூப்பர் ஸ்டாரை சீண்டும் தவெக -
முதல் விக்கெட்? திமுக கூட்டணிக்கு ‘குட்பை' சொல்லும் வேல்முருகன்.. அதிருப்திக்கு என்ன காரணம்? பின்னணி இதுதான்












Click it and Unblock the Notifications