பாஜக ஆட்சி கால 2ஜி லைசென்ஸ் ஒதுக்கீடு: முக்கிய ஆவணங்களைக் காணவில்லை!!

2001-03ம் ஆண்டு காலகட்டத்தில் மறைந்த பிரமோத் மகாஜன் தொலைத் தொடர்புத்துறை அமைச்சராக இருந்தபோது ஏர்டெல் மற்றும் வோடபோன் ஆகிய நிறுவனங்களுக்கு ஸ்பெக்ட்ரம் அள்ளித் தரப்பட்டது.
இதில் நடந்துள்ள முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கப் பிரிவு எப்ஐஆர் பதிவு செய்துள்ளது.
இது தொடர்பாக விசாரணையை விரைவுபடுத்தியுள்ள சிபிஐ கடந்த 2001-07 காலகட்டத்தில் காலத்தில், தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்ட உரிமங்களின் ஒப்பந்த ஆவணங்களை தன்னிடம் ஒப்படைக்குமாறு தொலைத் தொடர்புத்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து பாரதி டெலிநெட், ஏர்செல் ஆகிய நிறுவனங்களுக்கு டெல்லி, மும்பை மண்டலங்களுக்கு வழங்கப்பட்ட 2ஜி லைசென்ஸ் குறித்த சில ஒப்பந்தங்களை சிபிஐ தொலைத் தொடர்புத்துறை ஒப்படைத்துள்ளது.
ஆனால், ஹட்சின்சன் அண்ட் ஸ்டெர்லிங் செல்லுலார் (இப்போது வோடபோன்-எஸ்ஸார் மொபைல் சர்வீஸ்), பிபிஎல் மொபைல், ஐடியா செல்லுலார் ஆகிய நிறுவனங்களுடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தங்கள் தொடர்பான ஆவணங்களைக் காணவில்லை என்றும், அதைத் தேடும் பணி நடப்பதாகவும், ஆவணங்கள் கைக்கு கிடைத்ததும் ஒப்படைக்கப்படும் என்றும் சிபிஐயிடம் தொலைத் தொடர்புத்துறை தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications