திமுக மாஜி அமைச்சர் பெரிய கருப்பன் மீது பெண் ரூ.1.45 கோடி மோசடி புகார்

ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த சாந்தகுமாரி என்பவர் போலீஸ் டி.ஜி.பி. அலுவலகத்தில் நில மோசடி பிரிவில் கொடுத்த புகாரில்,
எனது கணவருடன் விவாகரத்து ஆனதால், எனது மகனுடன் வாழ்ந்து வருகிறேன். எனது தந்தையுடன் நேமிசந்த் மார்வாடி ஒருவர் தொழில் பார்ட்னராக செயல்பட்டார். எனது தந்தை இறந்தவுடன், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள எங்களுக்கு சொந்தமான சுமார் 3 ஏக்கர் நிலத்தை எனது தந்தையின் தொழில் பார்ட்னர் அபகரித்து கொண்டார்.
அந்த நிலத்தை மீட்டுத்தரும்படி எனது உறவினரும், திமுக முன்னாள் அமைச்சருமான பெரிய கருப்பன் உதவியை நான் நாடினேன். நிலத்தை மீட்டுத்தருவதற்கு பல தவணைகளில் ரூ.1.45 கோடி பணம் கொடுத்தேன். எனது தாயார் பெயரில் உள்ள நிலத்தையும் அபகரித்து கொண்டனர்.
முன்னாள் அமைச்சர் பெரிய கருப்பன் உள்ளிட்ட சிலர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, எனது பணத்தையும், நிலத்தையும் மீட்டுத்தர வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார்.
புகாரின் பேரில் விசாரணை நடத்தப்படும் என்று டி.ஜி.பி. அலுவலகம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications