சீனாவுக்கு எதிராக திபெத்தியர்கள் செயல்படுவதை அனுமதிக்க முடியாது: எஸ்.எம். கிருஷ்ணா
Subscribe to Oneindia Tamil

சீனா சென்றுள்ள கிருஷ்ணா, அந்நாட்டின் முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
சீனாவின் சுயாட்சிப் பகுதி திபெத் என்றும் சீனாவுக்கு எதிராக இந்திய மண்ணில் இருந்து கொண்டு எவரும் செயல்பட அனுமதிக்க முடியாது என்றும் கிருஷ்ணா கூறினார்.
திபெத் விவகாரத்தில் சீனாவுக்கு இந்தியா உதவ தயாராக இருப்பதாகவும் கூறிய கிருஷ்ணா, சீனாவுடனான எல்லை பிரச்சனைகளுக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காண முடியும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணாவின் சீன பயணம் குறித்து செய்தி வெளியிட்டுள்ள சீன அரசு, சீனாவின் திபெத்திய நிலைப்பாட்டுக்கு இந்தியா முழு ஆதரவு அளித்திருப்பதாக தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications