வட இந்தியாவில் நில நடுக்கம்: வீடுகள் குலுங்கியதால் பொதுமக்கள் பீதி
உத்தரகாசி: வட இந்திய மாநிலங்களில் இன்று மதியம் திடீர் நில நடுக்கம் ஏற்பட்டதை அடுத்து பொதுமக்களிடையே பீதி ஏற்பட்டது. நில நடுக்கத்தினால் உத்தரகண்ட் மாநிலத்தில் பர்காட், உத்தரகாசி ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது.
வட மாநிலங்களான பஞ்சாப், ஹரியானா உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று மதியம் நில நடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 5 ஆக பதிவானது. நிலநடுக்கத்தினால் வீடுகள் குலுங்கியதை அடுத்து உத்தரகண்ட் மாநிலத்தில் யமுனா பள்ளத்தாக்கு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் அச்சத்துடன் வீடுகளை விட்டு வெளியேறினர்.
உத்தரகாசி, பர்காட் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. ஆனால் அதிக அளவில் சேதம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படவில்லை. இதே பகுதியில் கடந்த 1991 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தில் நூற்றுக்கணக்கான பேர் உயிரிழந்தனர். நிலநடுக்கத்தினால் பஞ்சாப், சண்டிகர், ஹரியானாவில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications