கூடங்குளம் விவகாரம்: 4 பேர் கொண்ட நிபுணர் குழு அமைப்பு: ஜெயலலிதா உத்தரவு

சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கையில் கூடங்குளம் அணுமின் நிலையம் குறித்து ஆய்வு செய்து அறிக்கை சமர்பிக்க 4 பேர் கொண்ட நிபுணர் குழு அமைக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார். அதன்படி தற்போது 4 பேர் கொண்ட குழுவில் இடம்பெற்றுள்ளவர்களின் பெயர்களை தலைமைச் செயலாளர் தேவேந்திரநாத் சாரங்கி வெளியிட்டுள்ளார்.
நிபுணர் குழுவினர் விபரம் வருமாறு,
1.பேராசிரியர் எம்.ஆர். சீனிவாசன் (முன்னாள் தலைவர், அணுமின் சக்தி கழகம்) கோத்தகிரி, நீலகிரி
2. டி. அறிவு ஒளி, பேராசிரியர், இயற்பியல் துறை, அண்ணா பல்கலைக்கழகம்
3. எஸ். இனியன், பேராசிரியர் மற்றும் இயக்குநர், எரிசக்தி ஆய்வு மையம், அண்ணா பல்கலைக்கழகம்
4.எல்.என். விஜயராகவன், தலைமைச் செயலர் நிலையில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி
இதில் எஸ்.இனியன் குழுவின் அமைப்பாளராக செயல்படுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த குழு கூடங்குளம் சென்று அணுமின் நிலையத்தை ஆய்வு செய்து, அங்குள்ள மக்களை சந்தித்து பேசி தனது அறிக்கையை சமர்பிக்கும்.












Click it and Unblock the Notifications