தேமுதிகவுடன் கூட்டணி வைத்தால் திமுக காணாமல் போய்விடும்-ராமதாஸ்

மதுரைக்கு வந்த டாக்டர் ராமதாஸ் அங்கு ஒரு புத்தக வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில்,
கடந்த சட்டசபை தேர்தலிலேயே, தே.மு.தி.க. உடன் கூட்டணிக்கு தி.மு.க அடிகோலியது. ஆனால், அது நிறைவேறாமல் போய்விட்டது. தற்போது, அதற்கான நடவடிக்கைகளில் மீண்டும் தி.மு.க. இறங்கியுள்ளதாக தெரிகிறது. இக்கூட்டணி அமைந்தால், அது பெரும் சரிவை சந்திக்கும். வருங்காலங்களில், தி.மு.க.என்ற கட்சியே இல்லாமல் போகும்.
தமிழகத்தில் 30 சதவீத இளைஞர்கள் உள்ளனர். அவர்கள் அரசியலை, கொடியவர்களின் கூடாரமாக எண்ணி ஒதுங்கிக் கொள்கின்றனர். இந்நிலையை மாற்றி, இளைஞர்களை அதிகளவில் அரசியலில் ஈடுபடும் நடவடிக்கைகளை பா.ம.க மேற்கொண்டுள்ளது.
சங்கரன்கோவில் இடைத்தேர்தல், நியாயமாக மற்றும் நேர்மையாக நடைபெறாது என்பதன் காரணத்தினாலேயே, இத்தேர்தலை புறக்கணித்துள்ளோம்.
தேவிகுளம், பீர்மேடு உள்ளிட்ட பகுதிகளை தமிழகத்துடன் இணைப்பதன் மூலம் மட்டுமே, முல்லை பெரியாறு அணை விவகாரத்திற்கு தீர்வு ஏற்படும் என்றார் ராமதாஸ்.
தனது பேட்டியின்போது வழக்கம் போல, திராவிடக் கட்சிகளுடன் இனி கூட்டணியே வைக்க மாட்டோம் என்றும் சொல்லி வைத்தார் ராமதாஸ்.












Click it and Unblock the Notifications