காதலர்களுக்கு 'ஸ்வீட்' வழங்க பாதுகாப்பு தேவை-காதலர் கட்சி வழக்கு!
சென்னை: காதலர் தினம் கொண்டாடும் காதல் ஜோடிகளுக்கு எங்களது அமைப்பினர் இனிப்பு வழங்குவதற்கும், காதலர்களுக்கும் மற்றும் எனக்கும் பாதுகாப்பு தர வேண்டும் என்று கோரி காதலர் கட்சி அறக்கட்டளை என்ற அமைப்பு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளது.
ஆனால் இதன் விசாரணை பிப்ரவரி 17ம் தேதிக்கு நீதிமன்றம் தள்ளி வைத்துள்ளது. அதாவது காதலர் தினக் கொண்டாட்டம் முடிந்த பிறகுதான் இந்த வழக்கே விசாரிக்கப்படவுள்ளது.
இதுதொடர்பாக காதலர் கட்சி அறக்கட்டளையின் தலைவரான பி.குமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில்,
காதலர் தினத்தன்று இனிப்பு வழங்கும் எங்கள் அமைப்பினருக்கும், காதலர்களுக்கும், எனக்கும் பாதுகாப்பு வழங்க டி.ஜி.பி., சென்னை போலீஸ் கமிஷனர் ஆகியோருக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார்.
இந்த மனு நேற்று நீதிபதி ராஜேஸ்வரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அதைப் பரிசீலித்த அவர் விசாரணையை 17ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications