ராவணன் மீது ரூ. 2 கோடி மோசடி செய்ததாக புகார்-மறுபடியும் கைதாகிறார்
சென்னை: ஏற்கனவே 2 வழக்குகளில் கைது செய்யப்பட்டுள்ள சசிகலாவின் சித்தப்பா மருமகன் ராவணன் மீது மேலும் ஒரு வழக்குப் பதிவாகியுள்ளது. அதிலும் அவர் கைதாகவுள்ளார்.
வேலூரைச் சேர்ந்த தொழில் அதிபர் புவனேசன் என்பவர் மீண்டும், ராவணன் மீது புதிய புகார் மனு ஒன்றை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் கொடுத்துள்ளார்.
அதில்,
எனக்கு மணல் குவாரி உரிமம் பெற்றுத் தருவதாக ராவணன், அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனின் உதவியாளர் ஆறுமுகம், கார் டிரைவர் ராஜசேகரன் ஆகியோர் ரூ.2 கோடி வாங்கினார்கள். ரூ.5 கோடி கேட்டார்கள். முதல் தவணையாக ஆறுமுகம் மூலம் நான் அந்த தொகையை கொடுத்தேன். ஆனால் மணல் குவாரி உரிமம் பெற்றுத்தரவில்லை.
இதனால் நான் கொடுத்த ரூ.2 கோடி பணத்தை திருப்பி கேட்டேன். ஆனால் அந்த பணத்தை திருப்பித் தராமல் என்னை மிரட்டினார்கள். இது தொடர்பாக சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்ட்டுள்ளது.
இதையடுத்து தற்போது போலீஸார் ராவணன், ஆறுமுகம், ராஜசேகரன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இவர்களில் ஆறுமுகமும், ராஜசேகரனும் வீடு புகுந்து ஒரு பெண்ணை மிரட்டிய வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளது நினைவிருக்கலாம். இந்த நிலையில் தற்போது அவர்கள் மீது புதிய புகாரும் பாய்ந்துள்ளது.
விரைவில் இந்தப் புதிய வழக்கில் ராவணன் உள்பட 3 பேரும் கைது செய்யப்படவுள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications