ரோசய்யாவுடன் ஜெயேந்திரர் சந்திப்பு-குடியரசுத் தலைவருக்கு சங்கரராமன் மனைவி கடிதம்

காஞ்சிபுரம் வரதாஜ பெருமாள் கோவிலில் வைத்து சங்கரராமன் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், அவரது தம்பி ரகு, காஞ்சிபுரம் சங்கர மட மேலாளர் சுந்தரசே அய்யர், அப்பு உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். தற்போது அத்தனை பேரும் ஜாமீனில் வெளியே உள்ளனர்.
இந்த கொலை வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. சமீபத்தில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதியும், ஜெயேந்திரரும் ஒரு பெண்ணும் தொலைபேசியில் பேசியதாக சர்ச்சை வெடித்தது. இதுதொடர்பான ஆடியோ டேப் வெளியாகியது. இதையடுத்து அந்த நீதிபதி மாற்றப்பட்டார்.
இந்தச் சூழ்நிலையில், பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரோசய்யா கலந்து கொண்டார். அவரை ஜெயேந்திரர் சந்தித்துப் பேசியுள்ளார். இதுதொடர்பான புகைப்படமும் வெளியாகியுள்ளது. இருவரும் சிரித்துப் பேசியபடி அந்த புகைப்படத்தில் உள்ளனர்.
இதையடுத்து சங்கரராமனின் மனைவி பத்மா குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு ஒரு அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், எனது கணவர் சங்கரராமன் கொலை வழக்கில் ஏற்கனவே நீதி தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. சாட்சிகளைக் கலைக்க ஜெயேந்திரர் தரப்பு பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், எனது கணவரின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான ஜெயேந்திரர், தமிழக ஆளுநர் ரோசய்யாவை சந்தித்தது போன்ற புகைப்படம் வெளியாகியிருப்பது இந்த வழக்கில் நீதி கிடைக்காது என்பதை நிரூபிப்பதாக உள்ளது.
எனவே ஆளுநர் ரோசய்யாவை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது, கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை சந்திக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications