ரோசய்யாவுடன் ஜெயேந்திரர் சந்திப்பு-குடியரசுத் தலைவருக்கு சங்கரராமன் மனைவி கடிதம்

காஞ்சிபுரம் வரதாஜ பெருமாள் கோவிலில் வைத்து சங்கரராமன் படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், அவரது தம்பி ரகு, காஞ்சிபுரம் சங்கர மட மேலாளர் சுந்தரசே அய்யர், அப்பு உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். தற்போது அத்தனை பேரும் ஜாமீனில் வெளியே உள்ளனர்.
இந்த கொலை வழக்கு புதுச்சேரி கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. சமீபத்தில் இந்த வழக்கை விசாரித்து வந்த நீதிபதியும், ஜெயேந்திரரும் ஒரு பெண்ணும் தொலைபேசியில் பேசியதாக சர்ச்சை வெடித்தது. இதுதொடர்பான ஆடியோ டேப் வெளியாகியது. இதையடுத்து அந்த நீதிபதி மாற்றப்பட்டார்.
இந்தச் சூழ்நிலையில், பெங்களூரில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ரோசய்யா கலந்து கொண்டார். அவரை ஜெயேந்திரர் சந்தித்துப் பேசியுள்ளார். இதுதொடர்பான புகைப்படமும் வெளியாகியுள்ளது. இருவரும் சிரித்துப் பேசியபடி அந்த புகைப்படத்தில் உள்ளனர்.
இதையடுத்து சங்கரராமனின் மனைவி பத்மா குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலுக்கு ஒரு அவசர கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், எனது கணவர் சங்கரராமன் கொலை வழக்கில் ஏற்கனவே நீதி தாமதப்படுத்தப்பட்டு வருகிறது. சாட்சிகளைக் கலைக்க ஜெயேந்திரர் தரப்பு பல முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில், எனது கணவரின் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான ஜெயேந்திரர், தமிழக ஆளுநர் ரோசய்யாவை சந்தித்தது போன்ற புகைப்படம் வெளியாகியிருப்பது இந்த வழக்கில் நீதி கிடைக்காது என்பதை நிரூபிப்பதாக உள்ளது.
எனவே ஆளுநர் ரோசய்யாவை இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கேற்கக் கூடாது, கொலைக் குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களை சந்திக்கக் கூடாது என்று உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications