வெறும் பேப்பரைத்தான் கிழித்தார் ராகுல், தேர்தல் அறிக்கையை கிழிக்கவில்லை- பிரியங்கா
லக்னோ: லக்னோவில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது ராகுல் காந்தி பேப்பரைக் கிழித்தது குறித்து நான் அவரிடம் பேசவில்லை. செய்தித்தாள்களில் வந்த செய்தியைத்தான் நானும் படித்தேன்.ஆனால் அவர் தனது கையில் இருந்த சாதாரண பேப்பரைத்தான் கிழித்தார். யாருடைய தேர்தல் அறிக்கையையும் அவர் கிழிக்கவில்லை என்று கூறியுள்ளார் ராகுலின் சகோதரியான பிரியங்கா காந்தி வத்ரா.
உ.பி. தேர்தல் பிரசாரத்தின்போது கோபத்தில் தனது கையில் இருந்த ஏதோ பேப்பரை எடுத்துக் கிழித்துப் போட்டார் ராகுல் காந்தி. இதுசலசலப்பை ஏற்படுத்தி விட்டது.
அவர் பிற கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளைத்தான் கிழித்தார் என்றும் சர்ச்சை கிளம்பியுள்ளது. ஆனால் இதை பிரியங்கா மறுத்துள்ளார். இதுகுறித்து பிரியங்கா கூறுகையில், இதுகுறித்து நான் ராகுலிடம் பேசவில்லை. செய்தித்தாள்களைப் பார்த்துதான் தெரிந்து கொண்டேன்.
ஆனால் ராகுல் கிழித்தது சாதாரண பேப்பரைத்தான். யாருடைய தேர்தல் அறிக்கையும் அல்ல என்று கூறியுள்ளார் பிரியங்கா.
எப்படியோ, அரசியலுக்கு வந்து ராகுல் என்னத்தைக் கிழித்தார் என்று இனிமேல் யாரும் கேட்டு விட முடியாது.












Click it and Unblock the Notifications